Pages

வாசகர் வட்டம்

Sunday, March 28, 2010

அவன் கோமாவில்

அவன் கோமாவில் என்று அறிந்தது இப்போ தான் ,ஆனால் ஒரு வருடமாக இருக்கிறானாம் ...அதை ஒரு செய்தியாக மட்டும் கேட்டு விட்டு செல்லமுடியாமல் என்னுள் ஏதோ...இன்னும்...

.அவனை எனக்கு பாலியல் காலத்திலிருந்தே தெரியும் ......என்ன பாலியல் காலம் ...மீசை அரும்பி குரல் தடிக்கும் காலத்துக்கு முன்பே தெரியும்....ஓடிப் பிடித்து ...கல்லு குத்தி அடிச்சு பிடிச்சு ...கிந்தி தொட்டு ...என...விளையாடிய காலத்திலிருந்தே தெரியும் ...எங்களை போல இருக்கும் சராசரிகளை விட ....கொஞ்சம் ...வசதி ....கொஞ்சம் ....சொத்தின் செழிப்பு அவனில் தெரியும் .. அடிக்கடி மாற்றும் டெரிலின் சேட்டும் .....அந்த சேட்டு பொக்கற்றுக்குள்ளை தெரியும் பொக்கற் மணியும் .....அதாவது ...எங்களுக்கு ...சில்லறைகள் கிடைப்பதே கனவுகளாக இருக்கும் போது ....அவனது பொக்கற்றுக்குள் ...தினமும் ...அலங்கரித்த படி இருக்கும் .....வித விதமான கலரில் தெரியும் ...நிஜ ரூபாய் நோட்டுக்கள்...எங்களையும் சில நேரத்தில் எட்டி பார்க்கும்.......

எங்களை போல இருக்கும் ...பஞ்ச பரதேசிகளுக்கு . காணும் நேரத்தில்...தேவைபடும் நேரத்தில் ...அதை கொண்டு அவன் செலவழிக்க தவறுவதில்லை...அள்ள அள்ள குறையாத செல்வம் இருப்பதால் .. அப்படி செலவழிக்கிறான் போலை என்று சிலர் கூறலாம்....அதுக்கும் ஒரு மனம் வேணுமே ...அது அவனுடமிருந்தது ...எந்த விதமான..மேட்டு குடி மனோபாவம் இன்றி சக மாணவர்களிடம் மிகுந்த நட்பாக இருந்தான்.....வகுப்பு தோழன் எல்லாரையும் நண்பன் என்று சொல்ல முடியுமா .. அல்லது நண்பனை எல்லாம் வகுப்பு தோழன் என்று சொல்லமுடியுமா...என்ற ஆராய்ச்சி எல்லாம் விட்டு விட்டு பார்த்தால்....என்னை அடிக்கடி காணுகின்ற அல்லது காண விரும்புகின்ற ...என்னுடன் சுக துக்கங்கள் உலக நடப்புகளை பகிர்ந்து கொள்கிறவனாகவாக இருந்தான்.....இதனால் இவனை எனது நண்பன் என்ற வரைக்குள் உட்படுத்தலாம் ..சில வேளை உட்படுத்த முடியாது.....காரணங்கள் பல.....அதை இப்ப விடுவம்

இவனது தகப்பனார்...புகழ் பெற்ற கல்லூரியில்...உயிரியல் ஆசிரியராக இருந்தது மட்டுமன்றி ...யாழ் உள்ள தனியார் டியூட்டரிகளில் புகழ் பெற்ற ஆசிரியராகவும் இருந்தார்......

இவனுக்கு ....சிறு வயதில் இருந்து ....மற்றவர்கள் செய்யாத செய்யமுடியாததை செய்து காட்ட வேண்டும் என்ற வெறி இருந்தது ,,,,,அத்துடன்....மற்றவர்கள் அவனை வித்தியாசபடுத்தி பார்க்கவேண்டும் என்பதற்க்காக மற்றவர்கள் எதிர்பார்க்க முடியாத விசயங்களை கூட..
செய்வான்...

பத்தாம் வகுப்பில் ...உயிரியல் பாடத்தில்....இனப்பெருக்கம் ....என்ற தலைப்பு இருக்கும்......அந்த பாடம் படிப்புக்கும் காலமும் வந்தது....எங்களுக்கும் அரும்பு மீசை முளைத்து ...குரலும் கொஞ்சம் தடித்து .....உடம்பிலும் மனதிலும் ஏதோ வீணை வாசிப்பது போன்று இருக்கும் காலம் ...எதையும் ஆழமாக அறியும் விரும்பும் காலமும்... கூட....

இவனது தகப்பனார் தான் ..படிப்புகிறார்.....இவனும் அந்த வகுப்பில்.....இனப்பெருக்கம் என்று எழுத்தில் கரும்பலகையில் ..எழுதும் ..போதே...வகுப்பில்..சிறிய அடக்க முடியாத மெல்லிய சிரிப்பு ....ஆண் குறி ...பெண்குறி...படம் காட்டி ....விளங்கபடுத்த போக ....விளங்க படுத்த முடியாத,,,மெளன சிரிப்பொலி ...இப்படி இருக்க...மாஸ்டருக்கு ......தேவையில்லாத வேலை தானை...யாருக்கும் இந்த பாடத்தில்..சந்தேகம் இருந்தால் கேளுங்கோ என்று சொல்ல.........அவரது கஸ்ட காலம் இப்படி வரும் என்று கடைசி வரையும்...அவரும் ..நினைத்திருக்க..மாட்டார்.......

யாருக்கும் சந்தேகம் வராதமாதிரி எல்லோரும்..அமசடக்காக..இருக்க..
வன் தான் இனப்பெருக்கத்தில்..சந்தேகம் கேட்டான்...அவனின் தந்தையிடம் தான் கேட்டான் ....அந்த பதினைந்து வயதில் கேட்டான்.......அவனது தந்தையும்....ஆசிரிய,..தர்மத்தை மீற முடியமால்....அவனுக்கு ...எங்கள் முன் இனப்பெருக்கத்தின் இரகசியத்தை அவனது பிறப்பின் இரகசியத்தை விளக்கமளித்தார்....

உயர்தர மாணவர்களுக்காண ஒன்று கூடல் நடைபெறும் பொழுது ...எல்லோரும் ஒரே விதமான உடுப்பு போட்டு இருக்கும் போது ....இவன் ...மட்டும்....நஷனலும் வேட்டியும் உடுத்தி அங்குள்ளவர்களை பரபரப்பாக்கினான்.

இப்படி இவனது சாகசங்கள்..பல...பள்ளி படிப்பு ..முடிந்த பின்...அவன் ..கட்டிட கலை பொறியியல் படிப்புக்காக..பல்கலை கழகம் போனான்..அந்த படிப்பையும் 83 யூலையால்...அவன் முடிக்கவில்லை...

காலங்கள் ....எங்களை...கன காலம் சந்திக்க விடவில்லை....ஒருநாள்....புலத்தில
் ..மீன் கடையில்...மீன் வெட்டி கொண்டு வேலை செய்ய கண்டேன் ..அதே சாகசத்துக்காகவோ என நினைத்தேன்

..அதே பழைய உரிமையில் தான் என்னுடன் கதைத்தான்..

அவனை பற்றி காது வழிசெய்திகள்தான் ...இப்ப சொல்வது....ஒரு பிரபல கவிஞனின் முதல் மனைவியை தனது முதல் மனைவியாக கொண்டான்...இதையும் வித்தியாசமாக முந்தி செய்த மாதிரி நினைத்து செய்தானோ என்னவோ தெரியவில்லை ...இவனது குடும்பத்தினர் ....உறவினர்கள்..நண்பர்கள்..ஒதுக்
கி வைத்தனர்....இவனது வாழ்க்கை முறை மாறியது கடன் குட்டி போட்டது ..கடன் கொடுத்தவர் தொல்லை கொடுத்தனர்..தொல்லையை மறக்க முனைந்தான்..மறக்க வழி தேடினான்.........இப்ப தன்னை மறந்து ...கோமாவில்.....

அவனுக்கு ..70 களில் இருந்த கால நினைவுகள்

மட்டுமே ஞாபகத்தில் சாடையாக இப்ப வருகின்றன....அந்த நாட்கள் ஞாபகங்கள் இனிமையானவை தான் ...என்றாலும் பாவம் அவனுக்கு அவை மட்டுமே வருவது பரிதாபம்

அவனை பார்க்க சென்றேன்
.
.எமது உருவங்கள் அந்த காலம் போல இல்லாததால் ...என்னையே ..பரக்க பரக்க பார்க்கிறான்.....அடையாளம் தெரியாமால்....

No comments: